சிம்புவின் ஈஸ்வரன் படபிடிப்புகள் முடிந்து வெளியிட்டிற்கு தயார் நிலையில் உள்ளது, அதேப் போல நின்று போன இனி அந்தப்படம் இல்லை என்ற மாநாடு கிடுகிடு வென பட பிடிப்புகள் அரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது.
சிம்பு இப்போது சிரத்தையுடன் தனது புதிய படங்களில் நடித்து வருகின்றார் இதனை அடுத்து இ்ப்பொழுது “பத்து தல” திரைப்படத்தினை அறிவித்துள்ளனர், இது கன்னடத்தில் வெளியாகி வெற்றிக்கரமாக ஒடிய படமாகும் இதில் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கின்றார் என்பது கூடுதல் தகவல்.
இந்த படத்தை நெடுஞ்சாலை, சில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கிய ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்குகின்றார் ஸ்டூடியோ கிரின் ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார்
சிம்பு நடிப்பு, நடனம்,வசனம், நகைச்சுவை என எல்லாத்துறைகளிலும் சிறந்த தனது திறனை வெளிப்படுத்த கூடியவர், நல்ல எண்டட்டயினர், இது சரியான தருணம் தனது சரிந்த பெயரை சரியாக நடந்து தூக்கினார் என்றால் சிம்புவின் வளர்ச்சி ஜெட் வேகம் தான்.
செய்தி : டிவிட்டர் திருடன்