சென்னை மே 10: இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ் திரையுலகில் 1970களில் தொடங்கி, கடந்த 41 ஆண்டுகளாக பயணித்து வருபவர் கங்கை அமரன். இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான இவர் சுவரில்லாத சித்திரங்கள், வாழ்வே மாயம், சட்டம், நீதிபதி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
கங்கை அமரனின் மனைவி மணிமேகலை (69) கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வீட்டில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரின் உடல்நிலை மோசமடைந்ததால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிமேகலை காலமானார். திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.